Saturday, 16 September 2017

Spiritual Test (ஆவிக்குரிய நிலை எப்படி?)

1. நான் இன்று யாராகிலும் ஒருவரை தீமையாக பேசினேனா அல்லது சிந்தித்தேனா?

2. நான் இன்று ஏதாவது வீணான வார்த்தைகளை பேசினேனா?

3. நான் பெருந்தீனிக்கோ அல்லது சோம்பேறிதனத்திற்கோ அல்லது ஏதேனும் அசிங்கமான இச்சைக்கோ ஈடுபடுத்திக்கொண்டேனா?

4. நான் இன்று யாரிடமாவது சுயநலமாய் நடந்து கொண்டேனா?

5. நான் யாரேனும் ஒருவரின் வீழ்ச்சியைக் கண்டு மகிழவோ அல்லது அதைப்பற்றி அக்கறையற்றவனாகவோ இருந்தேனா?

6. நான் இன்று தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையுமே முதலாவது தேடினேனா?

7. நான் நன்மை செய்வதற்கும் கிறிஸ்துவுக்காக சாட்சிபகர்வதற்க்கும் சந்தற்ப்பங்களை எதிர்நோக்கித் தேடினேனா?

8. நான் இன்று தேவனுடைய அன்பையும் அவருடைய வல்லமையையும் அல்லது அவருடைய ஆளுகையையும் சந்தேகித்தேனா?

9. நான் செய்து முடித்த ஏதேனும் காரியத்திற்காக பெருமை கொண்டு இருக்கிறேனா?

10. நான் இன்று ஏதேனும் ஒன்றிற்காக மனம் தளர்ந்தேனா அல்லது சோர்வுற்றேனா?

11. நான் எவ்வித பக்தி விருத்தியும் அல்லது பிரயோஜனமுற்ற ஏதாகிலும் ஒன்றைப் பேசினேனா அல்லது செய்தேனா  ?

12. நான் பிறர் எனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புவுவேனோ அதையே அவர்களுக்கு செய்தேனா?

13. நான் பிறருடைய விஷயங்களை  மாம்ஷுகமாய் தோண்டி விசாரிக்கிறவனாகவோ அல்லது வீண் அலுவல்காரனாகவோ இருந்தேனா ?

14. நான் இன்று ஏதேனும் பிரையோஜனமற்றவைகளுக்காக பணத்தை வீணடித்தேனா ?

15." என்னை நம்பி எனக்காக மாத்திரம்" சொல்லப்பட்ட விஷயங்களை நான் பிறரிடம் சொன்னேனா ?

16. நான் இன்று யாரேனும் ஒருவரிடம் பொறுமையற்றிருந்தேனா?

17. நான் சமுதாயத்தில் தாழ்ந்தவர்களையும், என் வேலைகாரர்களையும் எவ்வாறு நடத்தினேன் ?

18. நான் என்னை சுற்றியுள்ளவர்களிடம் ஊக்குவிக்கும் வார்த்தைகளையும் அல்லது உற்சாகமான பாராட்டுதலையும் பேசியிருக்கிறேனா?

19. நாள் இன்று என் குடும்பத்தாரிடம் என் அன்பை காட்டினேனா?

20. "எல்லோரைக்காட்டிலும் நானே விசேஷித்தவன்" என இன்று எண்ணியிருந்தேனா ?

21. நான் இன்று யாராகிலும் ஒருவரை... என் சிந்தையிலும்கூட நியாயம் தீர்த்தேனா?

22. நான் என் இதயபூர்வமாய் முற்றிலும் மன்னிக்காமல் யாரேனும் இருக்கிறார்களா ?

23. நான் பிறரைக் குறித்து சொல்லப்பட்ட தீமையான விஷயங்களை அவை உண்மைதானா என சோதிக்காமலே நம்பிவிட்டேனா?

24. இன்று முழுவதும் என் சிந்தைகள் தூய கற்புள்ளதாய் இருந்தாதா?

25. நான் என்னை பகைத்தவர்களுக்காகவும் என்னை துன்புறுத்தினவர்களுக்காகவும் ஜெபித்தேனா?
26. நான் இன்று யாராகிலும் ஒருவரிடம் பொறாமை கொண்டேனா ?

27. நான் என் சக விசுவாசிகளை மேன்மையாய் எண்ணி அவர்களில் மகிழ்ந்திருந்தேனா ?

28. நான் என் சகோதரர்களின் ஆவிக்குரிய மற்றும் சரீர தேவைகளுக்காக அக்கறை காட்டினேனா ?

29. நான் என்னையறியாமலே யாருக்காவது தீங்கிழைத்திருப்பேனா?

30. நான் சொன்ன என் வார்த்தைகளையும் கொடுத்த வாக்குகளையும் நிறைவேற்றினேனா ?

31. நான் இன்று சந்தித்த அனைவருக்கும் ஒர் வேலைக்காரனாகவே இருந்தேனா?

32. நான் என் ஒவ்வொரு கவலைகளையும் பாரங்களையும் ஆண்டவர் மீதே வைத்திருந்தேனா?

33. நான் இன்று எந்தவொரு மனுஷனின் அபிப்பிராயங்களையாகிலும் நாடித்தேடினேனா ?

34. நான் இன்று ஏதேனும் நேரத்தை வீணடித்தேனா ? அல்லது நான் இந்நாளை பயனுள்ளதாய் செலவழித்தேனா ?

35. இன்று தேவன் என்னிடம் பேச விரும்பியதை கேட்பதற்கு நான் விழிப்புடன் இருந்தேனா ?


36. நான் என்னால் முடிந்த மட்டும் ஆடம்பரத்தைத் தவிர்த்து எளிமையாய் வாழ்ந்திட முயற்ச்சித்தேனா ?

37.நான் இன்று என் பிதாக்களிடத்தில் ஏதேனும் ஆவிக்குரிய பிரயோஜனமான காரியங்களை கலந்துரையாடினேனா ?

38. நான் இன்று என் மனைவியின் (கணவனின்) வேலையில் உதவி புரிய முயற்சித்தேனா ?

39. நான் பெற்ற அதே வெளிச்சத்தை பெறாத யாரேனும் ஒருவரை அலட்சியம் செய்தேனா?

40. என் இருதயத்தில் யாரேனும் ஒருவரைக்குறித்தாவது ஏதாகிலும் கெட்ட சிந்தையுள்ளதா ?

இயேசு தெய்வமா ?

இயேசுவின் தெய்வீக தன்மை பற்றி சந்தேகம் இருப்பின் கீழ் கொடுக்கப்பட்ட வசனங்களை தியானித்தால் தெளிவு கிடைக்கும்

தம்மைப்பற்றிய சாட்சி


 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான், கண்டு களிகூர்ந்தான் என்றார்.
யோவான் 8 :56
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஜம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
யோவான் 8 :57
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 8 :58


அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
யோவான் 5 :18

வணக்கத்துக்குரியவர்


அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு,தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
மத்தேயு 2 :11


அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
மத்தேயு 8 :2
இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
மத்தேயு 8 :3

அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
மத்தேயு 14 :33

சீடர்களின் சாட்சி (வணக்கத்துகுரியவர் ஆண்டவர் மட்டுமே மனிதர் அல்ல)


பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
அப்போஸ்தலர் 10 :25
பேதுரு அவனைத் தூக்கியெடுத்து; எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
அப்போஸ்தலர் 10 :26

அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன், அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார், உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன், தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 19 :10


பாவ மன்னிப்பு


பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
மத்தேயு 9 :6


உயிர்ப்பிக்கும் அதிகாரம்


 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
யோவான் 5 :21


நியாயத்தீர்ப்பின் அதிபதி


அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்


நாமத்தின் அதிகாரம்


என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.
யோவான் 14 :14